Tuesday, December 8, 2009

உன் பிரிவால்


நாம் இருந்த இடத்தில் தனிமையில் வாழ முடியவில்லை

நீ கலட்டிய செருப்பு

உன் வண்டி

மிச்சம் வைத்த இனிப்பு

எல்லாமே என்னை கலங்க வைக்கிறது

வந்தேன் அம்மா வீட்டிற்கு

அம்மாவின் அன்பு

தம்பியிடம் அரட்டை

அப்பாவின் கவனிப்பு

இருந்தும் வெறுமை சூழ்கிறது



மாமியார் வீட்டிற்கு சென்றேன்

உன் நினைவுத்  தடங்களை கொண்டு வாழலாம் என்று

நீ அமர்ந்த இடம்

உன் சிரிப்பால் வெட்கம் கொண்ட இடம்

உன் கண்களால் என்னை தேடும் இடம்

அப்பப்பா

போதுமடா

நீ இல்லாமல் சொர்கம் என்றாலும் ______________________

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்



காதலுடன்

உன்னவள்

Thursday, December 3, 2009

காத்திருக்கிறேன் உனக்காக!




பிரசவத்தின் போது குழந்தைக்காக

தாய் காத்திருப்பது போல்

பருவ மழைக்காக

விவசாயி காத்திருப்பது போல்

மலரப்போகும் பூவுக்காக

வண்டு காத்திருப்பது போல்

ஆசையாய்

ஏக்கமாய்

கண்களில் கனவுகளுடன்

உதடுகளில் புன்னகையுடன்

மனத்தின் புன்னகைக்காக

காத்துகொண்டிருக்கிறேன்!

Sunday, November 15, 2009

என்னால் முடியவில்லை
மழையால் முடிகிறது
ஆம் என்னால் முடியவில்லை
 ஆனால் மழையால் முடிகிறது

உன் பிரிவால் நான் வடிக்கும்
கண்ணீரை வெளியே காட்ட
முடியவில்லை

எனக்கு பதில் மழை பெய்து
காட்டுகிறது
பார்த்துக்கொள் அன்பே!

Thursday, November 12, 2009

கண்ணீருக்கு விலை அதிகம்
உன்னால் வந்தால்
புன்னகைக்கு விலை அதிகம்
உன்னால் நான் அடைந்தால்
பூவுக்கு விலை அதிகம்
உன் கையால் அணிந்தால்
மௌன மொழிக்கு விலை அதிகம்
நம் இரு கண்களும் பேசினால்
அனைத்தும் நான் அடைந்தேன்

ஆனால் எந்த விலை கொடுத்தும்
உன் பிரிவை நான் பெறவில்லை
தீயாய் எரிகின்றது
இப்பிரிவு வேண்டாம் கண்ணா
என் அருகில் வந்து விடு!

Tuesday, November 10, 2009

உலகத்தை வெல்லும் ஆயுதம்
அன்பு
விட்டுக்கொடுத்தல்
தியாகம்
அரவணைப்பு
இன்முகம்
இன்சொல்
எல்லாமே உன் காதலால்
நான் கற்றேன் அன்பே!

Sunday, November 8, 2009

காதலன்: பிரிவில் உணர்கிறேன் எனது காதலை,உனது அன்பை!
காதலி: உன் பிரிவில் நான் எதுவும் உணரவில்லை,உன்னை தவிர

Saturday, November 7, 2009

தெரிந்து கொண்டேன்:


அவன் கண்ணில் கண்டதனால்
சொற்கம் மிக சிறியதுதான்
அவன் கண்ணில் கண்டதனால்
சொற்கம் மிக அழகுதான்!
நீ இன்றி என் நாட்கள்
முழுமை அடைய மறுக்கின்றது
ஒழி தரும் கதிரவா
என் அருகில் வந்துவிடு என் அன்பே!
பிரிவு:

புயல்
மழை
வெயில்
எல்லாமே ஒன்று தான்
நீ இன்றி!
---------------------------------------

உலகத்தை வெறுக்க தீவிரவாதம்
அரசியல் கொடுமை,
பற்றாக்குறை,
இயற்கை சீற்றம்,
எதுவுமே தேவை இல்லை
உன் பிரிவு ஒன்றே போதும்!