உன் பிரிவால்
நாம் இருந்த இடத்தில் தனிமையில் வாழ முடியவில்லை
நீ கலட்டிய செருப்பு
உன் வண்டி
மிச்சம் வைத்த இனிப்பு
எல்லாமே என்னை கலங்க வைக்கிறது
வந்தேன் அம்மா வீட்டிற்கு
அம்மாவின் அன்பு
தம்பியிடம் அரட்டை
அப்பாவின் கவனிப்பு
இருந்தும் வெறுமை சூழ்கிறது
மாமியார் வீட்டிற்கு சென்றேன்
உன் நினைவுத் தடங்களை கொண்டு வாழலாம் என்று
நீ அமர்ந்த இடம்
உன் சிரிப்பால் வெட்கம் கொண்ட இடம்
உன் கண்களால் என்னை தேடும் இடம்
அப்பப்பா
போதுமடா
நீ இல்லாமல் சொர்கம் என்றாலும் ______________________
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
காதலுடன்
உன்னவள்
Tuesday, December 8, 2009
Thursday, December 3, 2009
Sunday, November 15, 2009
Thursday, November 12, 2009
கண்ணீருக்கு விலை அதிகம்
உன்னால் வந்தால்
புன்னகைக்கு விலை அதிகம்
உன்னால் நான் அடைந்தால்
பூவுக்கு விலை அதிகம்
உன் கையால் அணிந்தால்
மௌன மொழிக்கு விலை அதிகம்
நம் இரு கண்களும் பேசினால்
அனைத்தும் நான் அடைந்தேன்
ஆனால் எந்த விலை கொடுத்தும்
உன் பிரிவை நான் பெறவில்லை
தீயாய் எரிகின்றது
இப்பிரிவு வேண்டாம் கண்ணா
என் அருகில் வந்து விடு!
உன்னால் வந்தால்
புன்னகைக்கு விலை அதிகம்
உன்னால் நான் அடைந்தால்
பூவுக்கு விலை அதிகம்
உன் கையால் அணிந்தால்
மௌன மொழிக்கு விலை அதிகம்
நம் இரு கண்களும் பேசினால்
அனைத்தும் நான் அடைந்தேன்
ஆனால் எந்த விலை கொடுத்தும்
உன் பிரிவை நான் பெறவில்லை
தீயாய் எரிகின்றது
இப்பிரிவு வேண்டாம் கண்ணா
என் அருகில் வந்து விடு!
Tuesday, November 10, 2009
Sunday, November 8, 2009
Saturday, November 7, 2009
Subscribe to:
Posts (Atom)