Tuesday, December 8, 2009

உன் பிரிவால்


நாம் இருந்த இடத்தில் தனிமையில் வாழ முடியவில்லை

நீ கலட்டிய செருப்பு

உன் வண்டி

மிச்சம் வைத்த இனிப்பு

எல்லாமே என்னை கலங்க வைக்கிறது

வந்தேன் அம்மா வீட்டிற்கு

அம்மாவின் அன்பு

தம்பியிடம் அரட்டை

அப்பாவின் கவனிப்பு

இருந்தும் வெறுமை சூழ்கிறது



மாமியார் வீட்டிற்கு சென்றேன்

உன் நினைவுத்  தடங்களை கொண்டு வாழலாம் என்று

நீ அமர்ந்த இடம்

உன் சிரிப்பால் வெட்கம் கொண்ட இடம்

உன் கண்களால் என்னை தேடும் இடம்

அப்பப்பா

போதுமடா

நீ இல்லாமல் சொர்கம் என்றாலும் ______________________

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்



காதலுடன்

உன்னவள்

No comments:

Post a Comment