உன் பிரிவால்
நாம் இருந்த இடத்தில் தனிமையில் வாழ முடியவில்லை
நீ கலட்டிய செருப்பு
உன் வண்டி
மிச்சம் வைத்த இனிப்பு
எல்லாமே என்னை கலங்க வைக்கிறது
வந்தேன் அம்மா வீட்டிற்கு
அம்மாவின் அன்பு
தம்பியிடம் அரட்டை
அப்பாவின் கவனிப்பு
இருந்தும் வெறுமை சூழ்கிறது
மாமியார் வீட்டிற்கு சென்றேன்
உன் நினைவுத் தடங்களை கொண்டு வாழலாம் என்று
நீ அமர்ந்த இடம்
உன் சிரிப்பால் வெட்கம் கொண்ட இடம்
உன் கண்களால் என்னை தேடும் இடம்
அப்பப்பா
போதுமடா
நீ இல்லாமல் சொர்கம் என்றாலும் ______________________
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
காதலுடன்
உன்னவள்
Tuesday, December 8, 2009
Thursday, December 3, 2009
Subscribe to:
Posts (Atom)