Tuesday, December 8, 2009

உன் பிரிவால்


நாம் இருந்த இடத்தில் தனிமையில் வாழ முடியவில்லை

நீ கலட்டிய செருப்பு

உன் வண்டி

மிச்சம் வைத்த இனிப்பு

எல்லாமே என்னை கலங்க வைக்கிறது

வந்தேன் அம்மா வீட்டிற்கு

அம்மாவின் அன்பு

தம்பியிடம் அரட்டை

அப்பாவின் கவனிப்பு

இருந்தும் வெறுமை சூழ்கிறது



மாமியார் வீட்டிற்கு சென்றேன்

உன் நினைவுத்  தடங்களை கொண்டு வாழலாம் என்று

நீ அமர்ந்த இடம்

உன் சிரிப்பால் வெட்கம் கொண்ட இடம்

உன் கண்களால் என்னை தேடும் இடம்

அப்பப்பா

போதுமடா

நீ இல்லாமல் சொர்கம் என்றாலும் ______________________

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்



காதலுடன்

உன்னவள்

Thursday, December 3, 2009

காத்திருக்கிறேன் உனக்காக!




பிரசவத்தின் போது குழந்தைக்காக

தாய் காத்திருப்பது போல்

பருவ மழைக்காக

விவசாயி காத்திருப்பது போல்

மலரப்போகும் பூவுக்காக

வண்டு காத்திருப்பது போல்

ஆசையாய்

ஏக்கமாய்

கண்களில் கனவுகளுடன்

உதடுகளில் புன்னகையுடன்

மனத்தின் புன்னகைக்காக

காத்துகொண்டிருக்கிறேன்!