Thursday, December 3, 2009

காத்திருக்கிறேன் உனக்காக!




பிரசவத்தின் போது குழந்தைக்காக

தாய் காத்திருப்பது போல்

பருவ மழைக்காக

விவசாயி காத்திருப்பது போல்

மலரப்போகும் பூவுக்காக

வண்டு காத்திருப்பது போல்

ஆசையாய்

ஏக்கமாய்

கண்களில் கனவுகளுடன்

உதடுகளில் புன்னகையுடன்

மனத்தின் புன்னகைக்காக

காத்துகொண்டிருக்கிறேன்!

No comments:

Post a Comment