காத்திருக்கிறேன் உனக்காக!
பிரசவத்தின் போது குழந்தைக்காக
தாய் காத்திருப்பது போல்
பருவ மழைக்காக
விவசாயி காத்திருப்பது போல்
மலரப்போகும் பூவுக்காக
வண்டு காத்திருப்பது போல்
ஆசையாய்
ஏக்கமாய்
கண்களில் கனவுகளுடன்
உதடுகளில் புன்னகையுடன்
மனத்தின் புன்னகைக்காக
காத்துகொண்டிருக்கிறேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment